தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக வணக்கத்திற்குரிய ரத்துபஸ்வல சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த போராட்டம் இன்று (08) பிற்பகல் 1.00 மணியளவில் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தில் குதித்துள்ளார்.
மகிந்த ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரியும் தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.