21 614d5e306f01d666
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை

Share

அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கான உத்தேச திருத்தங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதி வழங்க அமைச்சரவை முடிவு செய்தள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக்கட்டப்பாட்டை நீக்கி அரிசி பற்றாக்குறையை தடுக்க ஒருலட்சம் மெற்றித் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை நேற்றைய தினம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....