21 614d5e306f01d666
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை

Share

அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கான உத்தேச திருத்தங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதி வழங்க அமைச்சரவை முடிவு செய்தள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக்கட்டப்பாட்டை நீக்கி அரிசி பற்றாக்குறையை தடுக்க ஒருலட்சம் மெற்றித் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை நேற்றைய தினம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...