அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய அரசும் இல்லை; புதிய பிரதமரும் இல்லை! – வதந்தியை நம்பாதீர் என்கிறார் கோட்டாபய

Share
கோட்டாபய 2
Share

“எமது அரசு தொடர்ந்தும் பயணிக்கும். தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை. சிலரால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த நல்லாட்சி அரசால் – தேசிய அரசால்தான் நாடு இந்தளவு நெருக்கடியைச் சத்துள்ளது. இந்நிலையில், மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு?

எமது அரசு பெரும்பான்மைப் பலத்துடன் இன்னமும் இருக்கின்றது. அரசைக் கவிழ்க்கச் சதி செய்வோர் தொடர்பில் நாம் கவனம் எடுத்துள்ளோம். அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் முடிவுக்கு வரும்” – என்றார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...