f13ITI3dx4JmHwF2f9EX 1
இலங்கைசெய்திகள்

கறவை மாடுகள் திருட்டு!

Share

கறவை மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இருந்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக படுகொலை செய்யும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதுடன், கறவை மாடுகள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மாகாண மற்றும் மாவட்ட விவசாய அதிகாரிகள் அமைச்சரிடம் இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.

இதனால் கறவை மாடுகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் சங்கிலிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய கறவை மாடுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ள நிலையில் மாடு திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...