f13ITI3dx4JmHwF2f9EX 1
இலங்கைசெய்திகள்

கறவை மாடுகள் திருட்டு!

Share

கறவை மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இருந்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக படுகொலை செய்யும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதுடன், கறவை மாடுகள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மாகாண மற்றும் மாவட்ட விவசாய அதிகாரிகள் அமைச்சரிடம் இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.

இதனால் கறவை மாடுகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் சங்கிலிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய கறவை மாடுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ள நிலையில் மாடு திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...