1fv837FpK23efl0TSlVr 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காட்டிற்குள் நிர்வாணமாக கூச்சலிட்ட பெண் மீட்பு!

Share

காட்டிற்குள் நிர்வாணமாக கூச்சலிட்ட பெண் மீட்பு!

கம்பளை அம்புலுவா காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக கூச்சலிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் நேற்று (02.05.2023) கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண் கடந்த மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் நிர்வாணமாக இவ்வாறு கூச்சலிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்பதாக கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...