sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச அரசை தூக்கி எறிய வேண்டும்! – சஜித் சூளுரை

Share

“வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச அரசை நாம் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படும் கட்சி தாவல்கள் முழுமையான சூதாட்டம். அந்தக் குப்பை மேட்டில் ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய மக்கள் கூட்டணியோ விழப்போவதில்லை.

இன்று அமைச்சுப் பதவிகளும், பிரதமர் பதவியும் ஏல விற்பனை சூதாட்டத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த நாற்காலி பரிமாற்றத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கிய அரசு இன்று நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பலம் ஐக்கிய மக்கள் சக்திக்கே இருக்கின்றது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...