ஐ.நா பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி

300370078 453949320080050 682383653246127321 n

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version