tamilni 437 scaled
இலங்கைசெய்திகள்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

Share

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடுத்த வாரம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.

அத்துடன் சுமார் 62 எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது 46 வாக்குகள் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலமானது, தற்போது சட்ட வரைவுத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சபாநாயகரின் அனுமதிக் கையொப்பம் இன்னும் இடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் குறித்த சட்டமூலமானது சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...