செய்திகள்இலங்கை

பன்டோரா விவகாரம் – வருமான வரித் திணைக்கள விசாரணை ஆரம்பம்

inv
inv
Share

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பன்டோரா ஆவணம் தொடர்பில் தற்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது. ஆவனத்தில் பெயரிடப்பட்டுள்ள தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவியான நிருபமா ராஜபக்சவிடமும் விசாரணை இடம்பெறவுள்ளது.

விசாரணைகளை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...