download 14 1 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!

Share

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு இந்த நிலை மேலும் அதிகரிக்க காரணமாக உள்ளது.

குறிப்பாக, மேல்மாகாணத்தில் அண்மைய வருடங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவானது 2017 ஆம் ஆண்டாகும்.  அதன் பின்னர் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் 2023 ஆம் ஆண்டில் பதிவாகலாம்.

அதன்படி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் மோசமடையக்கூடும் என்பதுடன், தற்போதைய ஆபத்து சூழ்நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாண சுகாதார திணைக்களம் இன்று (26) முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்தல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...