24 665eaedf18f7a
இலங்கைசெய்திகள்

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

Share

மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

பழைய தகராறு காரணமாக தனது மாமனாரை மருமகன் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புத்தளம் மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது 56) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பழைய தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...