அமைச்சரின் சாரதி படுகொலை: பிரதான சந்தேகநபர் சிக்கினார்!

கைது

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட பகையின் காரணமாக பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் வைத்து அமைச்சரின் வாகன சாரதி நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version