images 1 2
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

Share

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

தையிட்டி விகாரைக்கு அருகில் உள்ள காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து தம்மிடம் தர கோரி 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் ஒப்படைத்த கடிதம் போலியானது அல்ல என கடிதம் எழுதி கையெழுத்து வைத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தையிட்டி விகாரையை சூழவுள்ள காணி உரிமையாளர்கள் கடிதம் மூலம் கோரி இருந்தனர்.
அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்ததுடன் , கடிதம் கொடுத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் என்பவரும் ஊடகங்களுக்கு கடிதம் கொடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து இருந்தார்
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 2019 ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு எழுதப்பட்ட கடிதம் என ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அந்த கடிதம் எழுதப்பட்ட கால பகுதியில் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினரே இல்லை. ஒருவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களை கொண்டுள்ளது. இருவரின் கையெழுத்து ஒரே மாதிரி இருக்கு என்று கூறி இந்த கடிதம் போலியானது என குறிப்பிட்டு , அந்த கடிதத்துடன் , கஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து , அந்த கடிதம் போன்றே இந்த கடிதமும் போலி என நிறுவ முயசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ஆ. பத்தமநாதனை ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் சந்தித்து கருத்து கேட்ட போது ,
தாங்கள் கடிதம் கொடுத்தது உண்மை எனவும் , விரும்பின் அந்த கடிதத்தின் கீழ் உள்ள ஏனையவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு கடிதம் கொடுத்தன் உண்மை தன்மையை விளங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசியலுக்காக எம்மை பொய்க்காரர் ஆக்குவது எமக்கு மிகுந்த மன வேதனையை ஈடுபடுத்தியுள்ளதாக மேலும் கவலையுடன் தெரிவித்தார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...