images 1 2
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

Share

அரசியலுக்காக மக்களை பொய்க்காரர் ஆக்காதீர்!!

தையிட்டி விகாரைக்கு அருகில் உள்ள காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து தம்மிடம் தர கோரி 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் ஒப்படைத்த கடிதம் போலியானது அல்ல என கடிதம் எழுதி கையெழுத்து வைத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தையிட்டி விகாரையை சூழவுள்ள காணி உரிமையாளர்கள் கடிதம் மூலம் கோரி இருந்தனர்.
அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்ததுடன் , கடிதம் கொடுத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் என்பவரும் ஊடகங்களுக்கு கடிதம் கொடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து இருந்தார்
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 2019 ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு எழுதப்பட்ட கடிதம் என ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அந்த கடிதம் எழுதப்பட்ட கால பகுதியில் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினரே இல்லை. ஒருவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களை கொண்டுள்ளது. இருவரின் கையெழுத்து ஒரே மாதிரி இருக்கு என்று கூறி இந்த கடிதம் போலியானது என குறிப்பிட்டு , அந்த கடிதத்துடன் , கஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து , அந்த கடிதம் போன்றே இந்த கடிதமும் போலி என நிறுவ முயசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ஆ. பத்தமநாதனை ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் சந்தித்து கருத்து கேட்ட போது ,
தாங்கள் கடிதம் கொடுத்தது உண்மை எனவும் , விரும்பின் அந்த கடிதத்தின் கீழ் உள்ள ஏனையவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு கடிதம் கொடுத்தன் உண்மை தன்மையை விளங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசியலுக்காக எம்மை பொய்க்காரர் ஆக்குவது எமக்கு மிகுந்த மன வேதனையை ஈடுபடுத்தியுள்ளதாக மேலும் கவலையுடன் தெரிவித்தார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...