sajith resign
இலங்கைசெய்திகள்

அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன – எதிர்க்கட்சி தலைவர்

Share

நாட்டினுடைய வளங்களை துச்சமாக கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம் , மறுபுறத்தில் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதனை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நடைபெற்றுவருவதாக கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

இவையனைத்தும் நாட்டினுடைய பொதுச்சொத்துக்கள் என குறிப்பிட்ட அவர் இவை ஒரு தனி நபருக்கோ அல்லது குழுவுக்கோ சொந்தமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை வைத்தோ அல்லது பணபலத்தின் மூலமாகவோ இந்தக் காணிகளை எந்தத்தரப்பினை சேர்ந்தவர்களும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அராசாங்கம் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய அவர் , உரிய சட்டங்களுக்கு மாறாக நடைபெறுகின்ற நிலஅபகரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...