இலங்கைசெய்திகள்

கச்சதீவு மீட்பு விவகாரம் – சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு

Share
rtjy 8 scaled
Share

கச்சதீவு மீட்பு விவகாரம் – சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு.

கச்சதீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடு செய்ய முடியாது என சென்னை மேல் நீதிமன்றின் மதுரைக்கிளை அறிவித்துள்ளது.

சென்னை கடற்றொழிலாளர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், மேல் நீதிமன்ற கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்த நிலையில், 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் தமிழக மீனவர்கள், இலங்கையில் தாக்கப்படுவதுடன் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, 1974-ம் ஆண்டில் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சதீவை மீட்க மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த மனுவூடாக சென்னை கடற்றொழிலாளர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன் கோரிக்கை விடுத்திருந்தார்.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய குழாமின் அமர்வில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கச்சதீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

எனவே இந்த வழக்கை மேலும் முன்கொண்டு செல்ல முடியாது என அறிவித்து குறித்த மனுவை சென்னை மேல் நீதிமன்றின் மதுரை கிளை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள்ன் அத்துமீறிய மீன்பிடி நடவக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்தின் முடிவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...