sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச அரசுக்குச் சர்வதேசம் உதவாது! – அடித்துக் கூறுகின்றார் சஜித்

Share

“நாட்டை எப்படி ஆள்வது எனத் தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கொரோனாவைக் காரணம் காட்டுகின்றனர்.”  – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நெருக்கடியான காலகட்டத்தில்கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை. வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன. எனினும், கொரோனாவைக் காட்டி அனுதாபம் திரட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் முற்படுகின்றனர். தமது இயலாமையை மூடிமறைக்கப் பலதும் செய்கின்றனர்.

ஆனால், தமக்கு முடியாது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். சர்வதேசத்தை நாடமுடியாது. நாடினால் உதவியும் கிடையாது.

எனவே, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். சம்பளம் உட்பட எந்தவொரு வரப்பிரதாசங்களையும் வாங்காமல் சிறந்த வழிகாட்டலை வழங்குவேன்” – என்றார்.

#SriLanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...