maithri
இலங்கைசெய்திகள்

சு.கவின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் – மைத்திரி அறைகூவல்

Share

நாட்டின் எதிர்காலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தங்கியுள்ளது  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எம்மால்தான் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நெறிமுறை சிந்தனைக்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவது எமது கடமை. இதற்கு எம்முடன் இணையுமாறு பண்டாரநாயக்காவின் சமாதியிலிருந்து சகல மக்களுக்கும் அழைப்பு விடுகின்றேன்.

இன்று நாடு மாறிவிட்டது. உலகமும் மாறிவிட்டது. ஆனால் பண்டாரநாயக்காவின் முற்போக்கான கொள்கை வேலைத்திட்டம் இன்றைய யுகத்துக்கு ஏற்றதைப் போலவே அன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே புதிய பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் எதிர்கால நலன்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றை விரைவாக கொள்கை ரீதியாக செயற்படுத்த முன்னோக்கி செல்ல  எம்முடன் இணையுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...