download 26 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!

Share

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் அதே தொடருந்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வாகனத்தில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...