பந்துல குணவர்தன
இலங்கைசெய்திகள்

நாட்டில் 2029 வரை பொருளாதார நெருக்கடி! – வர்தகத்துறை அமைச்சர்

Share

நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது தாக்குப்பிடிக்க முடியாத அளவு கடன்களுக்குள் நாம் மூழ்கியுள்ளோம்.

இதனை சமாளிக்க 2029ஆம் ஆண்டு வரையில் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் நெருக்கடி, அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாது போனமை மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் காரணமல்ல.

கடந்த அரசாங்க காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் கொவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளுமே காரணம்.

நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதற்கு வெறுமனே கொரோனா வைரஸ் பரவல் காரணம்  என கூற முடியாது.

கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து கையாளப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் தாக்கம், அதன் பின்னரான தேசிய உற்பத்தி மீதான குறைந்த நம்பிக்கை மற்றும் உற்பத்திகளை குறைத்து, இறக்குமதியை மாத்திரமே நம்பியமை போன்றவையோ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணிகளாக அமைகின்றன.

இவற்றின் காரணமாக தாக்குப் பிடிக்க முடியாத அளவு அபிவிருத்திக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.அதன்படி 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...