பந்துல குணவர்தன
இலங்கைசெய்திகள்

நாட்டில் 2029 வரை பொருளாதார நெருக்கடி! – வர்தகத்துறை அமைச்சர்

Share

நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது தாக்குப்பிடிக்க முடியாத அளவு கடன்களுக்குள் நாம் மூழ்கியுள்ளோம்.

இதனை சமாளிக்க 2029ஆம் ஆண்டு வரையில் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் நெருக்கடி, அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாது போனமை மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் காரணமல்ல.

கடந்த அரசாங்க காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் கொவிட் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளுமே காரணம்.

நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதற்கு வெறுமனே கொரோனா வைரஸ் பரவல் காரணம்  என கூற முடியாது.

கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து கையாளப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் தாக்கம், அதன் பின்னரான தேசிய உற்பத்தி மீதான குறைந்த நம்பிக்கை மற்றும் உற்பத்திகளை குறைத்து, இறக்குமதியை மாத்திரமே நம்பியமை போன்றவையோ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணிகளாக அமைகின்றன.

இவற்றின் காரணமாக தாக்குப் பிடிக்க முடியாத அளவு அபிவிருத்திக் கடன்கள் பெறப்பட்டுள்ளன.அதன்படி 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...