நாளை வருகிறது டீசல் கப்பல்!

sunshine coast filling up car

டீசல் கொள்கலன் கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் தாங்கிய கொள்கலன் கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மெஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கொள்கலன் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வாரம் மேலும் பல பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLanlankaNews

Exit mobile version