rtjy 30 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு!

Share

மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு!

கடந்த வருடம் ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு,தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்சவை தலைவராக தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்ச மக்களாணையை பாதுகாக்கவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை,69 இலட்ச மக்களாணை என்பன பலவீனமடைய கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

கோவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள்,எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ராஜபக்சர்களிடமிருந்தும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் தனித்து செயற்படுவதாக மக்களுக்கு காண்பிக்கும் வகையில் தனித்து செயற்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதி கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியில் இருந்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள்.கடந்த ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது இறுதியில் ஜனாதிபதி கோட்டாபயவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள். ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...