சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண்மரணம்!

download 7 1 11

மொனராகலை பகுதியில் இருந்து நேற்று(20)  சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 69 வயது உடைய பி.ஏ.சீலாவதி என்ற  பெண்ணிற்கு நேற்று இரவு ஒரு மணி அளவில் ஊசி மலை பகுதியில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இணைந்து நல்லதண்ணி நகருக்கு அழைத்து வந்து அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மஸ்கெலியா பிராதேசிய வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

#srilankaNews

 

Exit mobile version