mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலை விரைவில் நீங்கும்! – மஹிந்த நம்பிக்கை

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைகள் விரைவில் நீங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வேலைத்திட்டத்துக்குத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என இதன்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

நெருக்கடியை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசின் மீது சகல பழிகளையும் சுமத்துகின்றனர் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டினர் எனவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...