tamilnig 12 scaled
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

Share

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பிக்கு குறித்து தீர்மானம்

பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ,சர்ச்சைக்குரிய காவி அங்கி அணிந்த துறவி இராமண்ண மகா நிகாயா துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தை இலங்கை இராமண்ண மகா நிகாய மகாநாயக்க தேரர் வண.மகுலேவே விமலபிதான தேரர் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை இராமண்ண மகா நிகாயாவின் சங்க சபை குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.

இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் காரக மகா சங்க சபை 15 டிசம்பர் 2023 அன்று சர்ச்சைக்குரிய துறவியை இராமண்ண மகா நிகாயாவிலிருந்தும் துறவறத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்தது.

தன்னை ‘விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் துறவி, கடந்த ஆண்டு டிசம்பரில், சமூக ஊடகங்களில் பௌத்தத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மீண்டும் கைது செய்யப்பட்ட குறித்த பிக்குவை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் சுனில் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...