தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!
இலங்கைசெய்திகள்

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!

Share

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!

தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் (2023.06.09) ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக் கல்வி வகுப்புக்களிலும் வாரத்தில் ஏழு நாட்களும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் பிள்ளைகளிற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றி கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியோ வகுப்புக்களும் தரம் 9 வரையான மாணவர்களிற்கு வகுப்புக்களை நடாத்துவதனை தவிர்த்தல் எனும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனை ஏற்று யூலை மாதம் 02 ஆம் திகதியிலிருந்து அதனை நடைமுறைப்படுத்தி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகத்திற்கும் பிரத்தியோ வகுப்புக்களை நடாத்துபவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறித்த விடயத்தில் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒத்துழைத்த அனைத்து பெற்றோர்களிற்கும் எனது நன்றியினை தெரிவித்து நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அனைத்து தரப்பினரையும் அன்போடு வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...