5 51
இலங்கைசெய்திகள்

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

Share

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நாட்டின் அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த ‘தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், அவற்றின் தலைவர்கள், தேசிய நலனைப் பற்றி சிந்திப்பதில்லை.

மாறாக, அடுத்த தேர்தலில் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெற முடியுமா இல்லையா என்பது பற்றி சிந்திக்கிறார்கள்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த திட்டத்தை நாசப்படுத்தினாலும் கூட, அவர்களுக்கு கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, முதலில் அரசியல் நெறிமுறைகள் மாற வேண்டும் நிச்சயமாக ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டம் அதை மாற்றியது.

அந்த போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை பாரம்பரிய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் ஏற்கனவே பல அரசியலமைப்பு வரைவுகள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைத்து இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒன்றை வரைவது மிகவும் எளிதாக இருக்கும். இந்தநிலையில், தலைவர்களின் அரசியல் சூழ்நிலையை, அரசியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கட்சி அதை நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை, என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...