5 51
இலங்கைசெய்திகள்

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

Share

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நாட்டின் அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த ‘தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், அவற்றின் தலைவர்கள், தேசிய நலனைப் பற்றி சிந்திப்பதில்லை.

மாறாக, அடுத்த தேர்தலில் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெற முடியுமா இல்லையா என்பது பற்றி சிந்திக்கிறார்கள்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த திட்டத்தை நாசப்படுத்தினாலும் கூட, அவர்களுக்கு கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, முதலில் அரசியல் நெறிமுறைகள் மாற வேண்டும் நிச்சயமாக ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டம் அதை மாற்றியது.

அந்த போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை பாரம்பரிய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் ஏற்கனவே பல அரசியலமைப்பு வரைவுகள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைத்து இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒன்றை வரைவது மிகவும் எளிதாக இருக்கும். இந்தநிலையில், தலைவர்களின் அரசியல் சூழ்நிலையை, அரசியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கட்சி அதை நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை, என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....