5 51
இலங்கைசெய்திகள்

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

Share

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நாட்டின் அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த ‘தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், அவற்றின் தலைவர்கள், தேசிய நலனைப் பற்றி சிந்திப்பதில்லை.

மாறாக, அடுத்த தேர்தலில் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெற முடியுமா இல்லையா என்பது பற்றி சிந்திக்கிறார்கள்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த திட்டத்தை நாசப்படுத்தினாலும் கூட, அவர்களுக்கு கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, முதலில் அரசியல் நெறிமுறைகள் மாற வேண்டும் நிச்சயமாக ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டம் அதை மாற்றியது.

அந்த போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை பாரம்பரிய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் ஏற்கனவே பல அரசியலமைப்பு வரைவுகள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைத்து இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒன்றை வரைவது மிகவும் எளிதாக இருக்கும். இந்தநிலையில், தலைவர்களின் அரசியல் சூழ்நிலையை, அரசியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கட்சி அதை நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை, என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...