5 51
இலங்கைசெய்திகள்

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

Share

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நாட்டின் அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த ‘தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், அவற்றின் தலைவர்கள், தேசிய நலனைப் பற்றி சிந்திப்பதில்லை.

மாறாக, அடுத்த தேர்தலில் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெற முடியுமா இல்லையா என்பது பற்றி சிந்திக்கிறார்கள்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த திட்டத்தை நாசப்படுத்தினாலும் கூட, அவர்களுக்கு கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, முதலில் அரசியல் நெறிமுறைகள் மாற வேண்டும் நிச்சயமாக ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டம் அதை மாற்றியது.

அந்த போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை பாரம்பரிய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் ஏற்கனவே பல அரசியலமைப்பு வரைவுகள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைத்து இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒன்றை வரைவது மிகவும் எளிதாக இருக்கும். இந்தநிலையில், தலைவர்களின் அரசியல் சூழ்நிலையை, அரசியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கட்சி அதை நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை, என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...