IMG 20221022 153900
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமியின் சங்கிலியை அறுத்த இராணுவச் சிப்பாய்மடக்கிப் பிடிப்பு!

Share

வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சிப்பாய் சங்கிலியை அபகரித்து விட்டு மாணவியையும் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.

காயமடைந்த சிறுமி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சங்கிலியை அபகரித்த இராணுவச்சிப்பாய் ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில், பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...