IMG 20221022 153900
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமியின் சங்கிலியை அறுத்த இராணுவச் சிப்பாய்மடக்கிப் பிடிப்பு!

Share

வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சிப்பாய் சங்கிலியை அபகரித்து விட்டு மாணவியையும் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.

காயமடைந்த சிறுமி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சங்கிலியை அபகரித்த இராணுவச்சிப்பாய் ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில், பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...