20 2
இலங்கைசெய்திகள்

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

Share

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தருசி கருணாரத்ன முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

குறித்த, 800 மீட்டர் ஓட்டப்போட்டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்றையதினம் சனிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

ஒட்டுமொத்த நிலையில் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 50 பேரில் 45ஆவது இடத்தை தருசி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் ஓடி முடித்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

இதற்கமைய, பரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையராக தருசி கருணாரட்ன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...