20 2
இலங்கைசெய்திகள்

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

Share

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தருசி கருணாரத்ன முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

குறித்த, 800 மீட்டர் ஓட்டப்போட்டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்றையதினம் சனிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

ஒட்டுமொத்த நிலையில் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 50 பேரில் 45ஆவது இடத்தை தருசி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் ஓடி முடித்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

இதற்கமைய, பரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையராக தருசி கருணாரட்ன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...