20 2
இலங்கைசெய்திகள்

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

Share

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய தருசி கருணாரத்ன

பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தருசி கருணாரத்ன முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

குறித்த, 800 மீட்டர் ஓட்டப்போட்டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்றையதினம் சனிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

ஒட்டுமொத்த நிலையில் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 50 பேரில் 45ஆவது இடத்தை தருசி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றிய தருசி, 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் ஓடி முடித்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

இதற்கமைய, பரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையராக தருசி கருணாரட்ன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...