24 66c960896ec81
இலங்கை

வெற்றிடமான எம்.பி பதவி : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

Share

வெற்றிடமான எம்.பி பதவி : தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரல (Thalatha Atukorale) விலகியதை அடுத்து அந்த பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி (Ratnapura) தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல 2024 ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரல தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
04 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் அனைத்து காணிகளும் டிஜிட்டல் முறைக்கு: காணி நிர்வாகத்தில் புதிய புரட்சி!

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் முறையாக வரைபடமாக்கி (Mapping), டிஜிட்டல் மயப்படுத்தும் விசேட...

05 5
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையின் சில பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்: ‘எச்சரிக்கை மட்டம்’ வரை உயரும் என அறிவுறுத்தல்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (06) வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை...

08 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஈரானியக் கப்பல் பணியாளர்களைப் பாதுகாப்பாக மீட்டது இலங்கை: திருகோணமலைக்கு மாற்றப்படவுள்ள ‘IRIS Bushehr’

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள 208 பணியாளர்களைப்...

22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...