unnamed 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விஹாரை சர்ச்சை: சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார் – விஹாராதிபதி அதிரடி அறிவிப்பு!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரை, அங்கு எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் முன்வைத்த பிரதான கருத்துக்கள் காணி விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் விசாரணை முடிவுகள் வரும் வரை, விஹாரை வளாகத்தில் புதிய கட்டுமானங்கள் எதுவும் செய்யப்படமாட்டாது.

எதிர்வரும் பௌர்ணமி தினத்தில் (ஜனவரி 3) தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாகவோ அல்லது விசேட பெரஹரா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாகவோ பரவும் செய்திகளில் உண்மையில்லை. அன்றைய தினம் வழமையான பூஜைகள் மட்டுமே நடைபெறும்.

விஹாரை அமைந்துள்ள இடம் சட்டவிரோதமானது என அரசாங்கக் குழு தீர்ப்பளித்தால், அந்தத் தீர்ப்பை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, காணிக்கு உரிமை கோரும் தரப்பினரும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

“அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்,” என விஹாராதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தற்போது வரை காணி விடுவிப்புத் தொடர்பாக எவரும் தன்னுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அரசாங்கக் குழுவின் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....