unnamed 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விஹாரை சர்ச்சை: சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார் – விஹாராதிபதி அதிரடி அறிவிப்பு!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரை, அங்கு எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் முன்வைத்த பிரதான கருத்துக்கள் காணி விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் விசாரணை முடிவுகள் வரும் வரை, விஹாரை வளாகத்தில் புதிய கட்டுமானங்கள் எதுவும் செய்யப்படமாட்டாது.

எதிர்வரும் பௌர்ணமி தினத்தில் (ஜனவரி 3) தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாகவோ அல்லது விசேட பெரஹரா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாகவோ பரவும் செய்திகளில் உண்மையில்லை. அன்றைய தினம் வழமையான பூஜைகள் மட்டுமே நடைபெறும்.

விஹாரை அமைந்துள்ள இடம் சட்டவிரோதமானது என அரசாங்கக் குழு தீர்ப்பளித்தால், அந்தத் தீர்ப்பை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, காணிக்கு உரிமை கோரும் தரப்பினரும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

“அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்,” என விஹாராதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தற்போது வரை காணி விடுவிப்புத் தொடர்பாக எவரும் தன்னுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அரசாங்கக் குழுவின் இறுதி முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...