நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காகத் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
அதன்படி, 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலை அதிபர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த அறிவுறுத்தலைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பரீட்சை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், இந்த மாணவர்களை அடுத்த கல்வித் தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியும் என அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.