sae scaled
இலங்கைசெய்திகள்

மன்னாரில் பதற்றம் – மீனவர்கள் மீது கடற்படையினர் அட்டகாசம்

Share

மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர்  மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகிய கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரிய வருவதாவது

நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற தனது தந்தையைக் காணவில்லை என கிராம அலுவலரான மகன் அப்பகுதிக்குச் சென்று மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவமுற்ற கடற்படையினர் அருகில் உள்ள முகாம் சென்று மேலும் 10 கடற்படையினரை அழைத்து வந்து அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட கிராமசேவையாளர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோது முறைப்பாட்டை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை வன்மையாகக் கண்டிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் தலைமையகத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் மீனவர்கள் தரப்பு மற்றும் தாக்கியதாக கூறப்படும் கடற்படையினர் ஆகியோரை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...