sae scaled
இலங்கைசெய்திகள்

மன்னாரில் பதற்றம் – மீனவர்கள் மீது கடற்படையினர் அட்டகாசம்

Share

மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர்  மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகிய கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரிய வருவதாவது

நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற தனது தந்தையைக் காணவில்லை என கிராம அலுவலரான மகன் அப்பகுதிக்குச் சென்று மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவமுற்ற கடற்படையினர் அருகில் உள்ள முகாம் சென்று மேலும் 10 கடற்படையினரை அழைத்து வந்து அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட கிராமசேவையாளர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோது முறைப்பாட்டை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை வன்மையாகக் கண்டிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் தலைமையகத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் மீனவர்கள் தரப்பு மற்றும் தாக்கியதாக கூறப்படும் கடற்படையினர் ஆகியோரை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...