பல்கலை மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சால் பதற்றம்
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சால் பதற்றம்!

Share

அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது நாடாளுமன்றத்துக்கு அருகில் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நுகேகொடையில் இருந்து இன்று மாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பயணித்த நிலையில், பத்தரமுல்லை பொல்துவ சந்திப்பகுதியில் வீதித் தடைகளைப் போட்டுப் பொலிஸார் மறித்தனர்.

இவ்வேளையில் வீதித் தடைகளையும் தள்ளி வீழ்த்திவிட்டு முன்னால் செல்ல முயன்றபோது மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதலை நடத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...