tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் குழப்பநிலை

Share

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் குழப்பநிலை

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதலில் கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறை மற்றும் பல இடங்களை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் மோதலை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களும் சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, நேற்று காலை தப்பியோடிய 20 பேர் கொண்ட கைதிகள் சோமாவதி புனித யாத்திரைக்காக வந்த பேருந்தை கடத்த முற்பட்டதுடன், வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணம் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் போது புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தப்பியோடிய 20 கைதிகளையும் கைது செய்யப்பட்ட 14 கைதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 34 கைதிகளும் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இராணுவமும் பொலிஸாரும் இணைந்து புனர்வாழ்வு நிலையத்தில் நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் மோதல்களில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...