யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!
இலங்கைசெய்திகள்

யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!

Share

rtjy 7

யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!

யாழில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியரின் இறுதிச் சடங்குகள் கடந்த 30.06.2023 அன்று இடம்பெற்றன.

இந்த நிலையில் அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சறோஜன் (சுதா – வயது 29) இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் வேலங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது.

அவரது இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சமூகமட்ட பொது அமைப்பினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீரின் மத்தியில் அவரை வழியனுப்பி வைத்தனர்.

அவர் அராலி மத்தி ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...