யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!
இலங்கைசெய்திகள்

யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!

Share

rtjy 7

யாழில் ஒருவருக்காக கலங்கி அழுத ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள்!

யாழில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியரின் இறுதிச் சடங்குகள் கடந்த 30.06.2023 அன்று இடம்பெற்றன.

இந்த நிலையில் அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சறோஜன் (சுதா – வயது 29) இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் வேலங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது.

அவரது இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சமூகமட்ட பொது அமைப்பினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீரின் மத்தியில் அவரை வழியனுப்பி வைத்தனர்.

அவர் அராலி மத்தி ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...