ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை

Share

ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை

ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளை களைவதற்காக எதிர்வரும் காலத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்தப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியங்கா பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நாடு முழுவதிலும் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாத நிலையில் நீடிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து அதன் ஊடாக வரவு செலவு திட்டத்தில் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...