7 15
இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Share

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலார் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.

இதன்படி கற்றல் நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இந்த காலத்தில் விலகியிருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...