இலங்கைசெய்திகள்

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

6 2
Share

இன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

வவுனியா (Vavuniya) மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02.01.2025) இடம்பெற்றது.

குறித்த கூட்டமானது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கனகராயன்குளம் தெற்கு அபிவிருத்தி சங்கத்தின் காணியை காவல்துறையினரின் பாவனையில் இருந்து விடுவித்தல், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனையடுத்து அதற்குரிய தீர்மானங்களும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், து.ரவிகரன், முத்துமுகமது, மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், காவல்துறையினர், இராணுவ உயர் அதிகாரி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...