12 6
இலங்கைசெய்திகள்

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

Share

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (06) புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.

எனினும், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.

இதேவேளை, குறித்த ஆசிரியரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் எதுவும் இல்லாத நிலையில் பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார்.

இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும் கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் உத்தரவுக்கு இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...