இலங்கைசெய்திகள்

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

Share
12 6
Share

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (06) புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.

எனினும், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.

இதேவேளை, குறித்த ஆசிரியரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் எதுவும் இல்லாத நிலையில் பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார்.

இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும் கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் உத்தரவுக்கு இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...