16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

Share

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று அழைக்கப்படும் ஆசிரியையான ஹைசிகா பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்யார்.

2025, மே 10 ஆம் திகதியன்று, இளைஞன் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹைசிகா பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த ஆசிரியையின் தாக்குலால், பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைசிகா பெர்னாண்டோ அந்தப் பகுதியை விட்டு தலைமறைவாகி, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.

அதே நேரத்தில் அவரது கணவரும் அவரது மேலாளரும் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஹைசிகா பெர்னாண்டோவும் ஒரு சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஹைசிக்காவின் கணவர் மேலாளர் மற்றும் ஹைசிகா ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் மௌனப் போராட்டத்தை நடத்தினர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...