16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

Share

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று அழைக்கப்படும் ஆசிரியையான ஹைசிகா பெர்னாண்டோ இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்யார்.

2025, மே 10 ஆம் திகதியன்று, இளைஞன் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஹைசிகா பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த ஆசிரியையின் தாக்குலால், பாதிக்கப்பட்ட இளைஞர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைசிகா பெர்னாண்டோ அந்தப் பகுதியை விட்டு தலைமறைவாகி, தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.

அதே நேரத்தில் அவரது கணவரும் அவரது மேலாளரும் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஹைசிகா பெர்னாண்டோவும் ஒரு சட்டத்தரணியின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஹைசிக்காவின் கணவர் மேலாளர் மற்றும் ஹைசிகா ஆகியோருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் மௌனப் போராட்டத்தை நடத்தினர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...