10 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையை 170 ரூபா வரை குறைக்க முன்வைக்கப்பட்ட யோசனை

Share

எரிபொருள் விலையை 170 ரூபா வரை குறைக்க முன்வைக்கப்பட்ட யோசனை

பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கினால் ஒவ்வொரு லீற்றரையும் 170 -190 ரூபாவிற்கு சந்தையில் விநியோகிக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் மேடைகளில் கூறியது போன்று எரிபொருள் வரியை நீக்கி மக்களுக்கு வரியின்றி எரிபொருளை வழங்குவதை காண காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரியை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அதனை ஒரே ஒரு வர்த்தமானி மூலம் செய்ய முடியும் எனவும் சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மின்சாரக் கட்டணத்தையும் முப்பது வீதத்தால் குறைக்கப்படும் என தேர்தல் மேடையில் அப்போது கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஐந்து வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் மக்களை போலி வாக்குறுதிகளால் முற்றாக ஏமாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...