10 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையை 170 ரூபா வரை குறைக்க முன்வைக்கப்பட்ட யோசனை

Share

எரிபொருள் விலையை 170 ரூபா வரை குறைக்க முன்வைக்கப்பட்ட யோசனை

பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கினால் ஒவ்வொரு லீற்றரையும் 170 -190 ரூபாவிற்கு சந்தையில் விநியோகிக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் மேடைகளில் கூறியது போன்று எரிபொருள் வரியை நீக்கி மக்களுக்கு வரியின்றி எரிபொருளை வழங்குவதை காண காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரியை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அதனை ஒரே ஒரு வர்த்தமானி மூலம் செய்ய முடியும் எனவும் சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மின்சாரக் கட்டணத்தையும் முப்பது வீதத்தால் குறைக்கப்படும் என தேர்தல் மேடையில் அப்போது கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஐந்து வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் மக்களை போலி வாக்குறுதிகளால் முற்றாக ஏமாற்றிவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....