மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானிடம் மற்றுமொரு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி படுதோல்வி

1 10

மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இதன்போது, கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.

முன்னதாக, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையில் பந்து சின்ன சுயேட்சைக் குழுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றின.

இந்நிலையில், தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் மற்றுமொரு சபையை இழந்துள்ளது.

இதேவேளை, ஆளும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version