9 ஆம் திகதி போராட்டத்துக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஆதரவு

Gotabaya Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுதினம் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

வன்முறைகளின்றி, அறவழியில் போராட வேண்டும் எனவும் மேற்படி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் 9 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பும் ஆதரவை வெளியிட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version