8 22
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் இல்லத்தில் ஒன்றுகூடிய தமிழ் தேசிய கட்சிகள்

Share

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூரில் அமைந்துள்ள எம். ஏ சுமந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் பிரேம சந்திரன் சிவநாதன் வேந்தன் சிவநாதன் வேந்தன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் தீபன் திலீசின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் பதில் தலைவர் சி.வி. கே சிவஞானம், எம் ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி அதிகார சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...