download 2 1 4
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதியை தனித்து சந்திக்கிறது கூட்டமைப்பு!

Share

ஜனாதிபதியை தனித்து சந்திக்கிறது கூட்டமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கொழும்பி சந்தித்து கலந்துரையாடவுள்ளது.  ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இடம்பெறும் இச்சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாம் முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகிச்செல்வதால் எந்தப் பயனுமில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமாயின், அனைத்துத்தரப்பினரும் பாராளுமன்றத்துக்குள்ளே ஒரே அரசாங்கமாகச் செயற்படவேண்டும் என்று கடந்த முதலாம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும் இதுகுறித்து அவ்வேளையில் கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கல் குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருந்ததாகவும்,  அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக  வெறுமனே கூறுவதைவிடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக எடுக்கவேண்டியது அவசியம் என்றும் அவர்  வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்துத் தமிழ்க்கட்சிகளையும் சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைத் தனியாக சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (9) பி.ப 3 மணியளவில் ஜனாதிபதிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொள்வார்.
அதேவேளை ஜனாதிபதியுடனான இச்சந்திப்புக் குறித்து ஆராயும் நோக்கில் நாளை திங்கட்கிழமை (8) மாலை 6 மணியளவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் அதில் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகவும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு விவகாரங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனித்து சந்திக்க ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலாக இது அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடையில் இதற்கு முன்னர் நான்கு சந்திப்புகள் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்த போதிலும் இந்த சந்திப்புகளில் தமிழர் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து பெரியளவில் கலந்துரையாடப் பட்டவில்லை என்பதுடன், பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...