rtjy 75 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

Share

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

சட்டவிரோத பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட 4 பேரை தமிழகம் சென்னை மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வான் ஒன்றுக்குள் இருந்த 4 பேரை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வான் வண்டியை சோதனை செய்ததில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் தாள்கள் அடங்கிய பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய குறித்த நான்கு பேருடன், கைப்பற்றப்பட்ட பணம் கே.கே.நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...